இந்தியர்கள் நிலவில் கால்பதிக்கும் காலம் கூடிய விரைவில் வரும் இஸ்ரோ மேனாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை

1 Min Read

இஸ்ரோ மேனாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை

அரசியல்

புதுக்கோட்டை, மார்ச் 11- இனி வரும் காலங்களில் விண் வெளி ஆய்விற்காக நில வுக்கோ, செவ்வாய்க்கோ செல்ல வேண்டுமானால் பல நாடுகள் இணைந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மயில் சாமி அண்ணாதுரை விருப்பம் தெரிவித்து உள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் வடக்காட் டில் தாய், தமிழ் மழலை யர் பள்ளியில் புதிய கட் டட திறப்பு விழா நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய விண் வெளி ஆய்வு நிலைய மேனாள் இயக்குநர் மயில்சாமி அண்ணா துரை, குழந்தைகள் தாய் மொழியில் கல்வி கற்பது தான் அறிவியல் பூர்வ மாக சிறந்தது என்று குறிப்பிட்டார்.

அறிவியல் கருது கோள்களை புரிந்துக் கொள்ள தாய்மொழி கல்வி அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.  விண்வெளி ஆய்வில் முன்னணியில் இருக்கும் நாடுகள் இணைந்து அடுத்தகட்ட ஆய்வு களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஏனென் றால் மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தியர் கள் நிலவில் கால்பதிக்கும் காலம் கூடிய விரைவில் வர வேண்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *