2030ஆம் ஆண்டுக்குள் விற்பனையாகும் இரண்டு கார்களில் ஒரு கார் மின்சார வாகனமாக இருக்கும்! ஆய்வறிக்கையில் தகவல்

2 Min Read

சென்னை, ஆக.3– 2030-க்குள் உலகில் விற்பனையாகும் 2 கார்களில் ஒரு கார் மின்சார வாகனமாக இருக்கும் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள்

பொருளாதார பூகோள உயிரியல் மய்யமானது மின்சார கார்கள், தள்ளுவண்டிகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பன்னாட்டு விநியோகச் சங்கிலிக்கு மின்சார கார்களின் பங்கு எப்படி இருக்க வேண்டும்? மின்சார வாகனங்களின் விற்பனையை எவ்வாறு அதிகரிப்பது? வணிக ரீதியில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது எப்படி? என்பன போன்ற பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

அதில், இந்திய விவசாய வாகனங்கள் கடந்த கால வளர்ச்சியை விட எதிர்காலத்தில் வளர்ச்சி அடையும். குறிப்பாக, 2015-2018-ஆம் ஆண்டுகளில் விவசாய வாகனங்கள் 4.4 சதவீதமாக வளர்ந்தன. 2015-2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த வளர்ச்சி உயர்ந்துள்ளது. 2015-2018-ஆம் ஆண்டுக்கான அந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பல மாவட்டங்களில் விவசாய வாகனங்களின் வளர்ச்சி சுமார் 5.4 சதவீதமாக இருந்தது.

2015-2040-இல் 0.6 சதவீதமும், 2025-இல் 23.1 சதவீதமும் 2035-2040-இல் 0.6 சதவீதமும் இந்த வளர்ச்சி யானது இருக்கும் என ஆய்வில் கூறப் பட்டுள்ளது.

ஆய்வறிக்கையில் தகவல்

இதுவரை உலகம் முழுவதும் பதிவான 2025-2040-இல் 23.1 சதவீதமும் மற்றும் அதற்கு அடுத்த நான்காண்டுகளில் உலகளவில் உள்ள அனைத்து வாகனங்களும் குறிப்பாக 1 கார் மின்சார வாகனமாக மாற்றப்படும். இப்பட்டியலில் அய்ரோப்பிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன.

தற்போது 25.6 சதவீதமாக இலங்கையில், 2030-க்குள் விற்பனை செய்யப்படும் வணிக ரீதியிலான மின்சார வாகனங்களின் விற்பனை 44.8 சதவீதமாக உயரும் என இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. 2020-2025-ஆம் ஆண்டின் இடைப் பட்ட காலத்தில் 2 கார்களில் ஒரு காரானது மின்சார வாகனமாக இருக்கும். ஆய்வறிக்கையின்படி ஏசியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்களின் விற்பனை கணிசமாக குறைந்திருக்கிறது. ஆசியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை 8 சதவீதமாகும்? அய்ரோப் பாவிலும் மற்றும் அமெரிக்காவிலும் இதன் வளர்ச்சி வேகமான இயக்க மாக இருக்கும் என காரணம் சொல் லப்படுகிறது.

2019-2021-கால கட்டங்களில் மின்சார வாகன உற்பத்தியானது கணிசமான உயர்ந்துள்ளது. இதற் கிடையே வாகன தயாரிப்பு துறையில் மின்சார வாகனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். மின்சார வாகனங்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு உருவாக் குதல் உள்ளிட்ட பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றனர்.

இந்த ஆய்வறிக்கையானது வியப்பை அளிப்பதாக உள்ளது. இந்த ஆய்வின் மூலமாக எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாடு குறையாது, மின்சார வாகனங்களின் போக்குவரத்து பொறுப்புமிக்கதாக இருக்கும் என்பதை ஆய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *