மேட்டூர், ஆக. 3- கருநாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளான தலைக்காவிரி, பாக மண்டலா, மடிகேரி மற்றும் வயநாடு உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, கருநாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.
முன்னதாக, தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் கருநாடக அணைகளின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.
இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை தமிழ் நாட்டிற்குத் திறக்க கருநாடகா மறுத்து வந்தது. காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் மேலாண்மை ஆணையம் நாள்தோறும் 3,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்ட நிலை யிலும் கருநாடக அரசு தண் ணீரைத் திறக்கவில்லை.
இந்நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உத்தரவின்பேரில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. முதலில் வினாடிக்கு 15,000 கன அடியாக இருந்த நீர்த்திறப்பு, பின்னர் 25,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.
தற்போது அணைக் கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று (3.8.2026) நீர்த்திறப்பு வினாடிக்கு 27,000 கன அடியாக மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 82.59 அடியாக உள்ளது.
கபினி அணையில் இருந்து அதிகளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வரும் நாட்களில் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
