சுற்றுச்சூழலைப் பராமரித்தலுக்கான விழிப்புணர்வு

1 Min Read

இயற்கை வளங்களை பாதுகாத்தல்,பல்லுயிர் பெருக்கத்தைப் பேணுதல், மற்றும் வருங்கால தலைமுறையினருக்காக ஆரோக்கியமான சுற்றுச்சூழலைப் பராமரித்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்பணிக்கப்பட்ட ஓர் ஆண்டுக்கான உலகளாவிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.

முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள்

வன மேலாண்மை, நீர்,மண்,காற்று மற்றும் ஆற்றல் போன்ற முக்கியக் கூறுகளை நீடித்த நிலைத்தன்மையுடன் பயன்படுத்துதல்.

பல்லுயிர் பாதுகாப்பு

வன உயிரின இழப்பைத் தடுத்து, நுட்பமான இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாத்தல்

வழிமுறைகள் : தண்ணீரைச் சேமித்தல், குழாய்களை இறுக்கமாக மூடி, கசிவுகளைச் சரிசெய்தல்.

பிளாஸ்டிக்கைக் குறைத்தல்: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களைத் தவிர்த்தல்.

மின்னணுக் கழிவுகளை நிர்வகித்தல் : பழைய தொலைபேசிகள், மற்றும் மின்னணு சாதனங்களைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக ,அவற்றை பாதுகாப்பாக மறு சுழற்சி செய்தல்.

மரம் நடுதல் : மண் அரிப்பைத் தடுக்க உதவுவதன் மூலம் உள்ளூர் பசுமைப் பகுதிகளை மேம்படுத்துதல்.

– தரும.வீரமணி,
மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *