24-7-2026, வெள்ளி மாலை 5-30 மணியளவில் பழனி மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தில் NEET &EWS நிரந்தரமாக ஒழிக்க கோரும் வாகன பரப்புரை வரவேற்ப்பு குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.இதில் பழனி, மானூர், கோரிக்கடவு பகுதியில் நடைபெறும் பரப்புரையில் நூறு இருசக்கர வாகனங்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இது குறித்து விரிவான முறையில் விளம்பரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.மேலும் இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் பி.ஆர்.பி ஆனந்தகிருட்டிணன், மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார், மாவட்ட இனைச்செயலாளர் ஆ.இராமகிருட்டிணன், மாவட்ட து.செயலாளர் ஆர்.பி.ஆணந்தன்,நகரச்செயலாளர் செந்தில், ப.க.மாவட்டத் தலைவர் திராவிடச் செல்வன், ச.பாலன், அமரபூண்டி பாலன், மாவட்ட து.தலைவர் மா.முருகன், சி.இராதாகிருட்டிணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
