தென்சென்னை முழுவதும் தொடர் தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள் நடத்த கலந்துரையாடலில் முடிவு

2 Min Read

சென்னை, ஜூலை 27– தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.7.2026 அன்று மாலை 6.30 மணிக்கு அய்ஸ்அவுஸ் ஆர்.வி.ஆட்டோ கடையில் நடைபெற்றது. பொதுக் குழு உறுப்பினர் கோவி.ராகவன் கடவுள் மறுப்பு கூறினார்.

நீட் ஒழிப்பு, இரு சக்கர வாகனம் பரப்புரைப் பயணம். தந்தை பெரியார் பிறந்த நாள், விடுதலை சந்தா மற்றும் கூட்டத்தின் நோக்கம் விளக்கி மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் உரையாற்றினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பெரியார் யுவராஜ் பரப்புரை பயணத்தின் மிக அவசியம், இளைஞர்கள் தோழர்கள் கலந்து கொள்வது மிக முக்கியம் என்பதை விளக்கி பேசினார். மாவட்ட துணை தலைவர் நான்கு நாட்கள் பரப்புரை பயணத்தில் பங்கேற்பதாகவும், இந்த பரப்புரை பயணம் அய்ஸ் அவுஸ் ஆயிரம் விளக்கு பகுதிகளில் தெருமுனை கூட்டம் போல் நடத்த வேண்டும் என்றும் பேசினார். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மாரிமுத்து பரப்புரை பயணத்தில் பங்கேற்பதாகவும், தொடர் பரப்புரை பயணம் நமக்கு மிகப்பெரிய அளவுக்கு ஒரு பிரச்சார பயணமாக அமைய வேண்டும் என்றும் பேசினார்.

தொடர்ந்து மாவட்ட துணை தலைவர் சேதுராமன், சூளைமேடு ராமச்சந்திரன், சைதை ரவி பேசினர். அதனை தொடர்ந்து நான்கு நாள்கள் தொடர் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தில் இரண்டு இரு சக்கர வாகனம் நான்கு நாள்கள் கலந்து கொள்வதென்றும் அய்ஸ் அவுஸ் பகுதியில் இருந்து தொடங்கும் போது 15 இருசக்கர வாகனம் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அய்ஸ் அவுஸ்ஆயிரம் விளக்கு பகுதியில் பரப்பரை என்பது தெருமுனைப் பிரச்சாரமாக நடத்திட வேண்டுமென்றும், தந்தை பெரியார் பிறந்த நாள் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இருந்து தென்சென்னை முழுக்க தொடர் தெருமுனைப் பிரச்சாரம் கூட்ட நடத்துவது என்றும், கடந்த விடுதலைச் சந்தாவை மீண்டும் தொடர்ந்து  புதுப்பிப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அய்ஸ் அவுஸ்அன்பு நன்றி கூறினார்

கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள்: மாவட்ட துணை தலைவர் மு.சண்முக பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் மணித்துரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட துணை இளைஞரணி செயலாளர் மாரிமுத்து, அய்ஸ் அவுஸ் அன்பு அப்துல்லா, உதயன், கோவி ராகவன், பி டி சி ராஜேந்திரன், பி.டி.சி. செல்வம் சைதை ரவி அய்ஸ் அவுஸ் தர்மா, தெய்வ சிகாமணி, ம.இனியா, சிவா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *