‘க்யூட்’ தேர்வு அவகாசம் நீட்டிப்பு

Viduthalai
2 Min Read

புதுடில்லி, மார்ச் 13- ஒன்றிய அரசின் கீழ் வரும் பல்கலைக் கழகங்  களில் மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் தேர்வுக்கு விண்ணப் பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் கீழ்வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங் களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக் காக பொது நுழைவுத் தேர்வு 2022-_2023ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட் டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் யு.ஜி.சி. சார்பில் வெளியிடப் பட்டது.

அதன்படி இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடை பெறும். இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ர வரி முதல் வாரம் தொடங் கப்பட்டது. இதேபோல் முதுநிலை படிப்புகளுக் கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை படிப்புக் கான தேர்வு முடிவுகளை ஜூன் 3ஆம் வாரமும், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூலையிலும் வெளியிட்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்பு களை தொடங்க யுஜிசி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப் பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள் ளிட்ட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இளங்கலை  பட் டப் படிப்புகளுக்கான கியூட் தேர்வுக்கு பிப்ரவரி மாதம்   முதல்  விண் ணப்பம் தொடங்கப் பட்டது.

விண்ணப் பங்களை சமர்ப்பிப்பதற் கான கடைசி தேதி மார்ச் 12ஆம் தேதி எனத் தெரிவிக்க ப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க மார்ச் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க லீttஜீs://நீuமீt.sணீனீணீக்ஷீtலீ.ணீநீ.வீஸீ/ என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளவும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *