அரியலூர் மருத்துவக்கல்லூரியில் “அனிதா நினைவு அரங்கம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

Viduthalai
3 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 14- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரியலூர் மருத்துவக்கல்லூரி யில் 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகை யில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு,

அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த கூலித் தொழிலாளியின் மகள் அனிதா சிறுமியாக இருந்த போதே அவரின் தாயார் இறந்து விட்டார். தமிழ்வழிக் கல்வி யில் பயின்று, அரியலூர் மாவட் டத்தில் 12ஆம் வகுப்புத் தேர் வில் 1200-க்கு 1176 மதிப்பெண் கள் பெற்றிருந்த நிலையில், ஒன்றிய அரசு,  மருத்துவ சேர்க் கையினை  12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணுக்கு பதி லாக, நீட் மதிப்பெண் அடிப் படையிலேயே நடைபெறும் என்ற அறிவிப்பினால் மனமு டைந்தார்.

ஏழை கிராமப்புற மாண வர்கள் நீட் தேர்வுக்குத் தயா ராவதற்குத் தேவையான விலை யுயர்ந்த  நீட் தேர்வு பயிற்சிகளை  பெறுவது சாத்தியமில்லை என்பதையும், 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படை யில்,  மருத்துவ சேர்க்கை தேர் வுகள் நடத்தப்பட்டால் மட் டுமே,  தன்னைப் போன்ற  கிரா மப்புற மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற முடியும் என்பதையும் உணர்ந்து, நீட் தேர்வு கிராமப்புற மாணவர் களின் நலன்களுக்கு எதிரானது என அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீட் தேர்வின் அடிப்படை யில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண் டும் என்ற இந்திய உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, தீர்ப்பு வெளியான ஒன்பது நாட்களில் அனிதா தனது இன்னுயிரை 2017 செப்டம்பர் 1ஆம் நாள் மாய்த்துக் கொண்டார். அவரது மரணம் நீட் தேர்வு முறையின் கொடூ ரத்தை உலகுக்கு உணர்த்தியது.

திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ்நாட்டில் பொறுப்பேற்றவுடன் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில்  குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைந்த அரசு செயலாளர்கள் குழுவினால் பரிந்துரைக்கப் பட்டு  தமிழ்நாடு அரசு, சட்ட மன்றத்தில் நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப் பியது. தமிழ்நாடு ஆளுநரால் அம்மசோதா திருப்பி அனுப் பப்பட்டது. மீண்டும் அந்த மசோதா தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர்வாயிலாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மசோதாவிற்கு  ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் தர வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகி றோம்.

அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகம் 2022 ஜனவரி 12-அன்று தமிழ்நாடு முதல மைச்சர் முன்னிலையில் இந் தியப் பிரதமரால் திறந்து வைக் கப்பட்டு இரண்டு ஆண்டு களாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற் போது இந்த புதிய  மருத்துவக் கல்லூரியில் நவீன மருத்துவ மனை  கட்டப்பட்டு, இம் மாவட்ட மக்களின் நலனிற்காக இன்று (14.3.2023) திறந்து வைக்கப்பட உள்ளது. 

இவ்வேளையில் நீட் எனும் தேர்வினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிரை இழந்த அனிதா நினைவாக அரியலூர் மாவட் டம், அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத் திற்கு “அனிதா நினைவு அரங் கம்” என பெயர் சூட்டப்படும் 

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *