அ.தி.மு.க.வை யாரும் விமர்சிக்கக் கூடாதாம் தமிழ்நாடு பா.ஜ.க.வினருக்கு ஜே.பி.நட்டா எச்சரிக்கை

Viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 15- அ.தி.மு.க. வுடன் சுமுக உறவு வைத்துக் கொள்ள வேண்டும். யாரும் விமர்சித்து பேசக்கூடாது என்று தமிழ்நாடு பா.ஜ.க. வினருக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள் ளார். தமிழ்நாடு பா.ஜ.க.வில் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளராக இருந்த நிர்மல் குமார் சமீபத்தில் அ.தி.மு.க. வில் இணைந்தார்.

அவரைத் தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் அ.தி.மு.க.வில் அய்க்கியமாகினர். இதையடுத்து பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்துக் கட்சியின் நிலைமை குறித்து அக்கட்சியின் தலைவர் கே.அண் ணாமலை விமர்சித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியின் உருவப் படத்தை பா.ஜ.க.வினர் எரித்துப் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அ.தி.மு.க.- பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. 2 கட்சி தொண்டர்கள் இடையே மனக்கசப்பையும் உண்டாக்கியது. மேலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்ட ணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். 

அப்போது அவர், தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஜே.பி. நட்டா, தமிழ் நாடு பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு கண்டிப்பான சில அறிவுரைகள் வழங்கி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

அ.தி.மு.க.வுடன் நாம் சுமூக உறவை வைத்துக்கொள்ள வேண் டும். அ.தி. மு.க. தலைமை குறித்தோ, தொண்டர்களை பற்றியோ யாரும் எந்தவித குறையும் சொல்ல வேண்டாம்.

இதனை தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பின்பற்றி நடக்க வேண்டும். இதனை யாரும் மீறி நடக்கக் கூடாது. இவ்வாறு அவர் அறிவு ரைகள் கூறி இருக்கிறார்.

ஜே.பி. நட்டாவின் இந்தப் பேச்சு மூலம் வருகிற நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்பது உறுதியாகி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *