வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள்: தமிழ்நாடு அரசின் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

1 Min Read

காஞ்சிபுரம்,மார்ச்15- – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச் சித் துறையின்  சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உத வித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ்  2022_-2023ஆம்  ஆண்டிற்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

விண்ணப்பதாரர்கள் 1.1.2022ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.   ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத் திற்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில்  இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமான சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்றை தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத் துடன் இணைக்கப்பட  வேண்டும்.  

இதற்கான விண்ணப்பப் படி வத்தை நேரிலோ  அல்லது தமிழ்  வளர்ச்சி துறையின் வலைத்தளத் திலோ (wwwtamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதந் தோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவல கத்தில் 31.3.2023க்குள் அளிக்கப்பட வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *