மேட்டூர், ஜூலை 20– மேட்டூர் அணையின் நீர் மட்டம் 74.92 கன அடியாக குறைந்ததால் காவிரி நீர் தேக்க பகுதியில் கிணறுகள் வெளியே தெரிகின்றன.
மேட்டூர் அணை
டெல்டா விவசாயி களின் உயிர்நாடி மேட்டூர் அணை. சேலம் மாவட்டம் மேட்டூரில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். முழு கொள்ளவை எட்டும் போது கடல் போல் மேட்டூர் அணை காட்சி அளிக்கும்.
இந்தாண்டு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்தாலும், கருநாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகரில் இருந்து தண்ணீர் திறக்கப் படாதாலும் தற்போது இந்த அணை வரண்டு காட்சியளிக்கிறது.
நேற்றைய (19.7.2026) நிலவரப்படி அணைக்கு வரும் நீர்வரத்தானது வினாடிக்கு 42 கன அடியா கவும், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாகவும் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 74.92 கன அடியாக உள்ளது.
கிணறுகள்
இவ்வாறு வறட்சி ஏற்பட்டுள்ளதால், மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு பண்ணவாடி, கோட்டையூர், மாசிலா பாளையம், சேத்துக்குழி, சாம்பள்ளி ஆகிய கிராமங்கள் அமைந்திருந்த பகுதிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் ஓடைகளாகவும், சில இடங்களில் ஆங்காங்கே இருந்த பழமையான கிணறுகளும் வெளியே தெரிகின்றன. குறிப்பாக நீர்த்தேக்க பகுதிகள் வரண்டு இருந்தாலும், கிணறுகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
அந்த வகையில் நீர்த் தேக்க பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிணறுகள் தற்போது வெளியே தெரிந்து காட்சி அளிப்பதை காண முடிகிறது. வரண்டு காட்சி அளிக் கும் மேட்டூர் அணையில் கிணறுகளில் மட்டும் தண்ணீர் இருப்பது போன்ற காணொலிக் காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
