பிற்பட்டோர் அல்ல; பிற்படுத்தப்பட்டோர்!

1 Min Read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரையைச் சேர்ந்த நம்முடைய தோழர் ஒருவர் விண்ணப்பித்துப் பெற்றிருக்கும் வகுப்புச் சான்றிதழில் (Community Certificate) Backward Classes  என்று குறிப்பிடு வதற்கு, தமிழில் பிற்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துறையின் பெயரும், அரசு பயன்படுத்தும் பெயரும் பிற்படுத்தப்பட்டோர் என்பது தான். அப்படியிருக்க,  ‘பிற்பட்ட’ என்று வழங்கப்படுவதேன்? 

நாங்கள் நாங்களாகவே பிற்பட்டோர் அல்ல, தாழ்ந்தோர் அல்ல; பிற்படுத்தப்பட்டோர்; தாழ்த்தப் பட்டோர் என்று சொல்லும்போது தானே, யாரால் என்ற கேள்வி எழும்; அப்போது தான் மநுதர்மத்தால், ஆரியத்தால், சனாதனத்தால் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்ற உண்மை உறைக்கும். இதுதானே திராவிடர் இயக்கம் கற்றுக் கொடுத்த சுயமரியாதை பால பாடம்.

அரசில் எத்தனை காலமாக இத் தவறு நடந்திருந் தாலும், இனி நடக்காத வண்ணம் தமிழ்நாடு அரசும், பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – சீர்மரபினர் நலத்துறையும், வகுப்புச் சான்றிதழ் வழங்கும் வருவாய்த் துறையும் உடனடியாக நட வடிக்கை எடுத்து, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந் தவர்’  என்று சான்றிதழ் வழங்க வகை செய்ய வேண் டும் என்பது திராவிடர் இயக்கத்தவர்களின் அவா!

– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *