தமிழ் இலக்கியத்திற்கு கவிஞர் வைரமுத்து ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்,அவரது படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான கவிதை வெளிப்பாடு ஆகியவற்றிற்காக 2025 ஆம் ஆண்டுக்கான 60 ஆவது ‘ஞானபீட விருதை’ பாரதிய ஞானபீடம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அறிவித்தது.
ஞானபீடம் விருது வழங்கும் விழா, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்த நாளில் ஜூலை 13 அன்று டில்லியில் நடைபெற்றது.
ஞானபீட விருதினை கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் டாக்டர் கரன்சிங் வழங்கினார்.
டில்லியில் விருது பெற்று தமிழ்நாடு திரும்பிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குத் தமிழர் தலைவர் தொலைப்பேசி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்தார்.
