90 அகவை காணும்  தொண்டறச் செம்மல் செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் வாழ்க! வாழ்க!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

தமிழ்நாட்டின் தனிப்பெரும், பொதுவான தமிழ்ச் சான்றோர்களில் முக்கியமானவரும், எளிய  குடும்பத்தில் பிறந்து, வறுமைத் தீயில் வாடி, அந்தப் பட்டறையில் பதப்படுத்தப்பட்டு, கடும் உழைப்பையே தனது மூலதனமாக்கி, இன்று மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக உயர்ந்தவருமான  உத்தமர், இன்று (15.8.2026)
90 வயது காணும் மாமனிதர், சிறப்புமிகு செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள்,

‘அண்ணாச்சி’ என்று அனைவராலும் அழைத்து உறவு கொண்டாடப்படும் மனிதநேயர். திருமிகு வி.ஜி.பி. சகோதரர்களை உலகறியச் செய்த மகத்தான பண்பாளர் அய்யா வி.ஜி.சந்தோசம் அவர்கள்.

‘ஈதல் இசைபட வாழ்தலுக்கு’ என்றும் இலக்கண, இலக்கியமான இணையற்ற பெரு உள்ளத்தினர்.

‘ஈத்துவக்கும் இன்பம்’ என்றும் அவரது தனி அடையாளம்.

வள்ளுவர் சிலைகளை உலக நாடுகளில் நிறுவிய வள்ளுவ வள்ளல் அவர்! கூட்டுக் குடும்ப உறவுக்கு அவர் ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டு.

அடக்கம் + உழைப்பு + அரவணைத்தல் + தமிழ்த் தொண்டறம் இவற்றின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகை அவர்.

நல்ல உடல்நலத்தோடு, நூறாண்டு தாண்டியும்  வாழ்ந்து, குடும்பத்திற்கும், குவலயத்திற்கும் வழிகாட்ட வேண்டும் என விழைகிறோம். தூய தொண்டறச் செம்மல் வாழ்க! வாழ்கவே!

அன்புடன்,

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *