ஜி.டி. நாயுடுவும் ரோல்ஸ் ராய்ஸ் காரும்

‘இந்தியாவின் எடிசன்’  என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் பல்வேறு சிறப்பான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால், அவருக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது பலருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு தான்.

அந்தக் காலகட்டத்தில் (பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்) இந்த ஆடம்பர வாகனத்தை இந்தியாவில் ஒரே ஒருவராக அவர் மட்டுமே சொந்தமாக வைத்திருந்தார்.

ஜி.டி. நாயுடு 1893ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வி மட்டுமே பெற்ற அவர், சுயமாக பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை செய்து ‘மிராக்கிள் மேன்’ என்று அழைக்கப்பட்டார்.

பரிசாக கிடைத்த
‘ரோல்ஸ் ராய்ஸ்’ கார்

இந்தியாவில் முதன்முதலாக மின்சார மோட்டாரை உற்பத்தி செய்தவர் ஜி.டி. நாயுடு. ஆட்டோமொபைல் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்த அவர், யுனிவர்சல் மோட்டார் சர்வீஸ் (UMS) என்ற நிறுவனத்தை தொடங்கி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்து வாகன சேவையை வெற்றிகரமாக நடத்தினார்.

அவரது அசாதாரண சாதனைகள், தொழில் வளர்ச்சி மற்றும் திறமையால் ஈர்க்கப்பட்ட சிலர், அவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்தனர். அந்தக் காலத்தில் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ போன்ற ஆடம்பர கார்கள் இந்திய அரசர்கள், பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள் மற்றும் மிகவும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமானவை. ஆனால் ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்த ஜி.டி. நாயுடு அதை வைத்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தொழில் முனைவோருக்கு உத்வேகம்

1944ஆம் ஆண்டில் தனது ஆட்டோமொபைல் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற அவர், பல தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இன்றளவும் ஜீடீ கார் மியூசியத்தில் (Gedee Car Museum) பல விண்டேஜ் கார்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன. இது அவரது வாகன ஆர்வத்தையும், தொழில் மரபையும் பிரதிபலிக்கிறது.

கோயம்புத்தூரை தென்னிந்தியாவின் முக்கிய தொழில்துறை மய்யமாக மாற்றுவதில் ஜி.டி. நாயுடுவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவரது நினைவு இன்றும் பல இளம் தொழில்முனைவோருக்கு உத்வேகமாக திகழ்கிறது.

இந்த வரலாற்று உண்மை, ஜி.டி. நாயுடுவின் அசாதாரண வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குகிறது.

அவரது சாதனைகள் இன்றும் நினைவு கூரப்படு கின்றன!

ஜி.டி.என். திரைப்படம்

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையும் – சாதனைகளும் ‘ஜி.டி.என்.’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *