உரிமை கோரப்படாத ரூ.9,330 கோடி பிஎப் நிதி!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 4- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வுக் காலத்துக்காக வருங்கால வைப்பு நிதி (பிஎப்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது, ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய மற்றும் சேமிப்புத் திட்டம் ஆகும்.

கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 31.83 லட்சம் பிஎப் கணக்குகளில் ரூ.10,181 கோடி உரிமை கோரப்படாமல் இருந்தது. ஒன்றிய அரசு தற்போது ‘‘உங்கள் பணம், உங்கள் உரிமை’’ என்ற இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன்படி உரிமை கோரப்படாத பிஎப். தொகை, வங்கி கணக்கு டெபாசிட், காப்பீட்டு தொகை, ஈவுத் தொகை, பிற நிதி சொத்துகள் உரியவர்களிடம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி கடந்த ஓராண்டில் பல்வேறு பிஎப் கணக்குகளில் முடங்கி இருந்த ரூ.851 கோடி உரியவர்களிடம் அளிக்கப்பட்டது. தற்போதைய புள்ளி விவரங்களின்படி நாடு முழுவதும் சுமார் 31 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎப் கணக்குகளில் ரூ.9,330 கோடி முடங்கியுள்ளது.

இந்த தொகையை உரியவர்களிடம் திருப்பி அளிக்க அதிதீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிஎப் கணக்குகளில் முடங்கியிருக்கும் ரூ.9,330 கோடி நிதி மூலம் 3 அய்அய்டி கல்வி நிறுவனங்களை உருவாக்க முடியும். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *