‘‘குடிமக்கள் ஒன்றும் அரசின் அடிமைகள் அல்ல; போராடுவது அவர்களின் உரிமை’’ மும்பை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

மும்பை, ஜூலை 3 “இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களும் இந்திய அரசாங்கத்தின் அடிமைகளாக மாற்றப்பட்டு வருகிறார்கள்” என்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜாம்தார் மிகவும் காட்டமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக முழக்கமிட்ட நபர் ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட ஊர்விலக்கு உத்தரவு தொடர்பான வழக்கை விசாரித்த  நீதிமன்றம் அதிரடி கருத்துகளைக் முன்வைத்துள்ளது.

நீதிமன்றத்தின் முக்கியக் கேள்விகள் மற்றும் கருத்துகள்

“அனைத்துக் குடிமக்களும் இந்திய அரசாங்கத்தின் அடிமை களாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களால் தங்களின் போராட் டங்களை நடத்த முடிவதில்லை, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த முடிவதில்லை. இதெல்லாம் என்ன நியாயம்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கேள்வித்தாள்
கசிவும், வழக்குகளும்

“இப்போது எத்தனையோ தேர்வுத் தாள்கள் கசிந்துள்ளன. அதற்கு எதிராக மக்கள் போராடினால், அவர்கள் மீது நீங்கள் வழக்குகளை போடுவீர்களா? இது என்ன நடைமுறை? போராடுவது என்பது நாட்டின் குடிமக்களுக்கு உள்ள அடிப்படை உரிமையாகும்” என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

“இந்த வழக்கின் மனுதாரர், ‘பாஜக அரசு, ‘அமித்ஷா ஒழிக’ போன்ற முழக்கங்களை மட்டுமே எழுப்பியுள்ளார். நாட்டின் குடிமக்களால் ஏன் இதுபோன்ற முழக்கங்களை எழுப்ப முடியாது? இந்த சாதாரண முழக்கங்களுக்காக ஒருவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுவது ஏன்?” என்று நீதிபதி மாதவ் ஜாம்தார் அரசுத் தரப்பிற்கு மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாகவும் பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி வெளியிட்டுள்ள இந்த கருத்துகள் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *