காபி போட்டதும் மீதமாகும் ஈரத் தூளை உலர்த்தாமல், வெறும் 90 நொடிகளில் உயர்தர ‘உயிரிக் கரி’யாக மாற்றும் புதிய பிளாஸ்மா தொழில் நுட்பத்தை கொரியாவின் புவி அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மிகக் குறைவாகவே மாசுக்களை உமிழ்கிறது. இதன் வாயிலாக, உணவுக்கழிவுகள் மதிப்புமிக்க திட எரிபொருளாக மாறுகின்றன.
‘ஏரோனாக்ஸ் கோ’வின் ஆய்வாளர்கள், சுற்றுலா செல்வோருக்கான சிறியதான, துணி தேய்ப்புக் (இஸ்திரி) கருவியை உருவாக்கியுள்ளனர். இது, உலர்ந்த ஆடைக்குள் சூடான காற்றைச் செலுத்தி, 8 முதல் 12 நிமிடங்களில் சுருக்கங்களை நீக்கிவிடுகிறது. ஈரத் துணிகளை உலர்த்தவும், அவற்றின் மீது வாசனைத் திரவியத்தை பீய்ச்சி நறுமணமாக்கவும் உதவுகிறது இந்த கருவி.
