அன்னை மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம்

1 Min Read

அரசியல்

திராவிடர் கழக தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம் குமரி மாவட்ட  கழகம் சார்பாக நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவ‌ட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றினார். 

அரசியல்

அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கலை இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன் , மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் உரையாற்றினர். பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு கருத்துரையாற்றினார். கழக மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோகுல், மாநகர கழக துணைத் தலைவர் கவிஞர் எச். செய்க்முகமது பங்கேற்றனர். தோழர்கள் ச.ச.மணிமேகலை, சுசீந்திரம்  மகா ராஜன் உரையாற்றினர். மு. குமரிச் செல்வர் , முத்துவைரவன் ந.தமிழ் அரசன், மாஸ்டர் இரா.முகிலன், சந்தோஷ் ,  மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *