அரசுப் பள்ளிகளில் 3.37 லட்சம் மாணவர்கள் சேர்க்கை பள்ளிக்கல்வித்துறை தகவல்

1 Min Read

சென்னை, ஜூன் 28–   தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளிலும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களை எடுத்துச் சொல்லியும், அரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளை கூறியும் மாணவர் சேர்க்கை முன்னெடுக்கப்படுகிறது.

அதன்படி, கோடை விடுமுறைக்கு முன்னதாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்தது. அந்தந்த பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.  இந்த நிலையில் நடப்பாண்டில் 4 லட்சம் மாணவ-மாணவிகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்த சூழலில், தற்போது வரை 3 லட்சத்து 37 ஆயிரத்து 469 பேர் சேர்க்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *