1985 முதல் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத்தில் 41 ஆண்டுகள் பணியாற்றி, ஜூன் 30, 2026இல் பணி நிறைவு செய்யும் எல். ராம்பகதூர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா, நிறுவனத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (26.6.2026) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் இக்கல்லூரி நிறுவனத்தின் துணை முதல்வர் முனைவர் ஜி. ரோஜா, வரவேற்புரை வழங்கி, எல். ராம்பகதூர் ஆற்றிய பணிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இந்நிறுவனத்தின் முதல்வர் கே.பி. வெள்ளியங்கிரி, முன்னாள் துணை முதல்வர் டாக்டர் எச். பர்வின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இவ்விழாவில் நிறுவனத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையுரை ஆற்றும்போது, எல். ராம்பகதூர் அவர்களின் ஒழுக்கம், நேர்மை, அர்ப்பணிப்புப் பணிகளை விரிவாக எடுத்துரைத்து, ஒரு கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அனைத்துப் பணியாளர்களின் ஒத்துழைப்பு தேவை என்பதை வலியுறுத்தினார். ஏற்புரை வழங்கிய எல். ராம்பகதூர், தனக்கு வாய்ப்பளித்த நிறுவனத்திற்கும், நிறுவனத் தலைவர் அவர்களுக்கும் நன்றி கூறினார். இறுதியாக முதன்மையர் ஜி. ராஜாராமன் நன்றியுரை வழங்கினார். எல். ராம்பகதூர் – ராம்குமாரி இணையருக்கு நிறுவனத் தலைவர் கி. வீரமணி பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். கல்லூரி சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
