
பெரம்பலூர், ஜூன் 17- பெரம்பலூரில் 10.6.2026 அன்று மாலை 6 மணிக்கு திராவிடர் எழுச்சி நாள் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாளினை திராவிடர் கழகத்தின் சார்பில் பரப் புரைப் கூட்டம் நடை பெற்றது.
மாவட்டத் தலைவர் தங்கராசு தலைமை ஏற்க, மாவட்டச் செயலாளர் விஜ யேந்திரன் வரவேற்புரை ஆற்றிட, மாவட்ட காப்பாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், ஆலத்தூர் ஒன்றியச் செயலாளர் வேலாயுதம், பெரம்பலூர் நகரத் தலைவர் துரைசாமி, வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் மு.சர்புதீன், வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் புலவர் இராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பேச்சாளர் தி.என்னாரெசுபிராட்லா சிறப்புரை ஆற்றினார். திமுக மாவட்டச் செய லாளர் வீ. ஜெகதீசன், மாவட்ட திமுக மருத்து வரணி தலைவர் ச.த. ஜெயலட்சுமி கருத்துரை ஆற்றினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜெயராமன், மக்கள் அதிகார அமைப்பின் மாவட்டச் செயலாளர் காவேரி நாடன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இவ் விழாவிற்கு ஆத்தூர் முருகானந்தம், காட்டூர் கனகராஜ், வின்சென்ட், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துணைத்தலைவர் இரா. சின்னசாமி நன்றி கூற கூட்டம் இனிதே நிறை வுற்றது.
