மறைவு

1 Min Read

அரசியல்

விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் விடுதலை தி.ஆதவனின் மாமியாரும், மாவட்ட. மகளிரணி அமைப்பாளர் சாந்தி அவர்களின் தாயாருமான நெ.இராசம்மாள் (வயது 92) உடல் நலக் குறைவு காரணமாக 19.3.2023 ஞாயிறு இரவு 10 மணியளவில் இறுதி எய்தினார். செய்தி அறிந்து மாவட்ட தலைவர் கா.நல்லதம்பி, அமைப்பாளர் வெ.முரளி, மண் டல இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், நகர ப.க. செயலாளர் பூ.பத்மநாதன், நகர தலைவர் சு.செல்வராசு, செயலாளர் பா.இராசேந்திரன், நகர இளைஞரணித் தலை வர் க.திருவள்ளுவர், செயலாளர் ஆ.கிள்ளி வளவன் மற் றும் தோழர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் பெருமளவில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர். 20.3.2023 திங்கள் காலை 10 மணியளவில் எவ்வித மூடச் சடங்குகளும் இல்லாது இறுதி ஊர்வலமாகச் சென்று, நக ராட்சி பொது எரிவாயு தகன மேடையில் எரியூட்டப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *