பேராசிரியர் தினேஷ் சிறப்பாக ஏற்பாடு

திராவிடர் கழகம்

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளான 12.06.2026 அன்று காலை 11 மணியளவில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை குழந்தைகள் கல்வி பெறுவது என்பது அரசியலமைப்பு விதிகளின்படி நமது உரிமை என்பதனையும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியமர்த்துவது சட்டப்படி குற்றம் என்றும் உரையாற்றியதோடு ஒரு குழந்தை தொழிலாளர் உருவானால் இந்நாடு ஒரு சாதனையாளரை இழக்கின்றது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் துணை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் மாணவர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை ஏற்றனர். இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் தினேஷ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *