நாடாளுமன்றச் செய்திகள்

Viduthalai
3 Min Read

சமையல் எரிவாயு விலையை குறைக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கேள்வி

அரசியல்

புதுடில்லி, மார்ச் 22- ஆயிரம் ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டிருக்கும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையைக் குறைப்பது மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் தேவையை சமாளிப்பது தொடர்பாக மாநிலங்களவை யில் திமுக மக்களவை உறுப் பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஒன்றிய பெட்ரோலியம் மற் றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் டெலி அளித்த பதில் வருமாறு: 

14.2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு விற்பனையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் மேற் கொள்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த எரிவாயுத் தேவையில் 60 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறோம். சராசரி சவுதி ஒப்பந்த விலை யின் அடிப்படையில்தான் இந் தியாவில் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படு கிறது. 2019 – 2022 காலகட்டத் தில் ஒரு மெட்ரிக் டன் எரிவாயு விலை 454 அமெரிக்க டாலரி லிருந்து 693 டாலராக உயர்ந்தது. பிப்ரவரி, 2023இல் இந்த விலை 790 டாலராக மேலும் உயர்ந்தது. ஆனாலும் முடிந்தவரை இந்தியச் சந்தை யில் இதன் விலையை ஒரு நிலைத்தன்மையோடு  நிர்ண யிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெருத்த இழப்பை சந்தித்தன. இதை ஈடுசெய்வதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒருமுறை நிவாரணமாக 22 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு கொடுத்துள்ளது.

இதுதவிர, பிரதம மந்திரி யின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரி வாயு உருளைகளுக்கு ஆண் டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகளுக்கு தலா 200 ரூபாய் மானியத்தை அரசு வழங்குகிறது. மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி டில்லியில் இந்த சமையல் எரிவாயு உரு ளையின் விற்பனை விலை 1103 ரூபாயாக இருக்கிறது.தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப பன்னாட்டு மார்க்கெட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படு கிறது. அத்துடன் பன்னாட்டு அளவிலான சமூக,அரசியல் நிலவரங்களும் இதன் விலை யில் தாக்கத்தை ஏற்படுத்துகின் றன. இந்த நிலையில், பெட் ரோலியப் பொருள்களின் விலை இப்படிதான் இருக்கும் என்று முன்கூட்டியே கணிப் பது இயலாத காரியம். குறிப் பாக உலக அளவில் தற்போது நிலவும் நிச்சயமற்ற தன்மை இந்த முன் யூகத்திற்கான வாய்ப்பை குறைத்துவிடுகிறது. 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்த வரை 2022. ஏப்ரல் 22ஆம் தேதியிலிருந்து அதன் விலை யில் எந்த மாற்றமும் செய்யப் படவில்லை. இந்திய சந்தையில் போதுமான அளவுக்கு பெட் ரோல், டீசல் இருப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரு கிறது.  

பெட்ரோலியப் பொருட் களின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்கு மதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வது, இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலை யங்களை முழு அளவில் பயன் படுத்துவது, கூடுதல் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது, பெட்ரோலில் குறிப்பிட்ட அளவுக்கு எத்தனால் கலந்து பயன்படுத்துவது என பல விஷயங்கள் அதில் அடங்கும். பெட்ரோலுக்கு நவம்பர் 2021, மே 2022 என இரண்டு கலால் வரியின் பயன் உபயோகிப் பாளர்களுக்கு முழு அளவில் கிடைத்தது. இதன் மூலம் பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும், ஏழை நடுத்தர மக்கள் பயன டையவும் நடவடிக்கை எடுக் கப்பட்டது. ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்த தன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்கள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வாட் வரியைக் குறைத்து, நடுத்தர மக்களின் சுமையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத் தன. இவ்வாறு அமைச்சர் ராமேஷ்வர் டெலி பதிலளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *