பெரியார் பன்னாட்டமைப்பு மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம், ஜப்பான் இணைந்து நடத்தும் பெரியார் சுயமரியாதை மனிதநேய மாநாடு எதிர்வரும் 2026 அக்டோபர் 11,12 (ஞாயிறு, திங்கள்) ஆகிய தேதிகளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் உலகெங்கும் இருக்கும் பெரியாரியலாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க இருக்கின்றனர். இரண்டு நாள் மாநாட்டிலும் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கிறார்கள்.
எனவே ஜப்பான் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் உடனடியாகத் தங்கள் பெயர்களைக் கீழ்க்காணும் ஒருங்கிணைப் பாளர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு: 94442 10999. 98424 87645
