சட்டமன்றம் இன்று (23.3.2023) காலை தொடங்கிய வுடன் மறைவுற்ற மேனாள் உறுப்பினர்கள் த.மாரிமுத்து, ப.தங்கவேலு, சி.நா.மீ.உபயதுல்லா, கு.சீனிவாசன் மற்றும் பிரபல பின்னணி பாடகி திருமதி வாணி ஜெயராம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தும் வண்ணம் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 மணித்துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக மேற்கண்ட உறுப்பினர்கள் மறைவுக்கு அவர்கள் குறித்த இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.