பெ. நடராசன் பணி நிறைவு பாராட்டு விழாவில் பெ. நடராசன் – முத்துக்கண்ணு இணையருக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார். உடன்: தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், ஒன்றிய மேனாள் அமைச்சர் ஆ. இராசா, அய்பெட்டோ அகில இந்திய செயலாளர் வா. அண்ணாமலை, சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட தி.மு.க. செயலாளர் வீ. ஜெகதீசன், முனைவர் நரேஷ், தங்க. சிவமூர்த்தி, மாவட்ட கழகத் தலைவர் சி. தங்கராசு மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்.

*பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ. இராசா பயனாடை அணிவித்து வரவேற்றார்.* எழுத்தாளர் இமையம், சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ம. பிரபாகரன், மாவட்ட தி.முக. செயலாளர் வீ. ஜெகதீசன், ஆதவன் ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்துப் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.

தமிழர் தலைவருக்கு மாவட்ட கழகத் தலைவர் சி. தங்கராசு, பெ. நடராசன் மற்றும் தி.மு.க. இணைய தளப் பிரிவின் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்துப் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.

* பெ. நடராசன் – முத்துக்கண்ணு, ந. பகுத்தறிவாளன் – யஸ்சஸ்வி ஆகியோர் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.40,000மும் ‘விடுதலை’ சந்தா தொகை ரூ.10,000மும் தமிழர் தலைவரிடம் வழங்கினர். * பெரியார் பெருந்தொண்டர் கு. வரதராசன் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெற்ற விருதை தமிழர் தலைவரிடம் காண்பித்து அதன் மகிழ்வாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.2,000மும், விடுதலை சந்தா தொகை ரூ.2,000மும் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசாவுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.
