ராகுல்காந்தி தகுதி நீக்கத்துக்கு கண்டனம்

1 Min Read

சட்டமன்றத்தில் கருப்புச் சட்டையில் காங்கிரசார்

அரசியல்

சென்னை,மார்ச்27- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி நீக்கத்தை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (27.3.2023) கருப்பு உடையில்  தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு வந்தனர். ராகுலுக்கு ஆதவராக இருப்பேன் என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளுடன் கங்கிராஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை வளாகத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது தொடர்பாக, குஜராத் நீதிமன்றம் கடந்த 24ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதை தொடர்ந்து, ராகுல் காந்தியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் என அறிவிக்கப்பட்டு அவர் பதவி பறிக்கப் பட்டது. அவரின் பதவி பறிப்புக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *