மோடி அரசின் நிதி நிர்வாக சீர்கேடு 35 ஆண்டு கால அடையாளம் மறைந்தது! திருப்போரூர் தனியார் தொழிற்சாலை மூடப்பட்டது! கேள்விக்குறியான தொழிலாளர்களின் வாழ்வாதாரம்?

திருப்போரூர், மே 13- செங்கல் பட்டு மாவட்டம் திருப்போரூரில் கடந்த 35 ஆண்டுகளாகச் செயல் பட்டு வந்த பிரபல தனியார் உப்பு சுத்திகரிப்பு மற்றும் பேக்கிங் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி யுள்ளது.

தனியார் தொழிற்சாலைகள்

திருப்போரூர் பகுதியில் 1991ஆம் ஆண்டு டி.சி.டபிள்யூ) என்ற பெயரில் இந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. பின்னர், குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ‘குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ் லிமிடெட்’ நிறுவனம் இதனை வாங்கி நடத்தி வந்தது.

தூத்துக்குடி மற்றும் வேதாரண்யத் திலிருந்து கொண்டு வரப்படும் கல் உப்பைத் தூள் உப்பாக மாற்றி, பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களின் பெயர்களில் பேக்கிங் செய்து விநியோகிக்கும் பணி இங்கு நடைபெற்று வந்தது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக இந்த ஆலை அமைந்திருந்தது.

மோடி அரசின் நிதிநிலை வீழ்ச்சி சூழலாலும் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளாலும் ஈரான் போரால் ஏற்கபட்ட ஏற்பட்ட ஏற்றுமதி சரிவுகளா தொழிற்சாலைக்கு வந்த வர்த்தக ஒப்பந்தங்கள் படிப்படியாகக் குறைந்தன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இப்பகுதியில் பயிற்சி விமானம் ஒன்று தொழிற்சாலை மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இயந்திரங்கள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்ததால் உற்பத்திப் பணிகள் முடங்கின.

நேற்று (12.05.2026) பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு, நிர்வாகம் அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. “இன்றுடன் உற்பத்தி நிறுத்தப்படுகிறது, அனைவருக்கும் உரிய செட்டில்மென்ட் செய்யப் படும்” என அறிவிக்கப்பட்டு ஆலை மூடப்பட்டது.

நிரந்தர ஊழியர்கள் 17 பேருக்கு 3 மாத ஊதியம் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்குக் கடந்த மாத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

“திருப்போரூரின் அடையாளங் களுள் ஒன்றாகத் திகழ்ந்த இந்த ஆலை, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது.

தற்போது திடீரென கதவுகள் அடைக்கப்பட்டதால், எஞ்சியுள்ள தொழிலாளர்கள் அடுத்தகட்ட வாழ்வாதாரத்திற்கு எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம்,” எனப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *