ஈரோடு இளைஞரின் உடல் உறுப்புகள் கொடை 5 பேருக்கு மறுவாழ்வு – அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!

ஈரோடு, மே 10 சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஈரோட்டைச் சேர்ந்த 27 வயது இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் முன்வந்து கொடையாக அளித்துள்ளனர். இதன் மூலம் அய்ந்து பேர் புதிய வாழ்வைப் பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் குமார் (27) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவித்தனர்.

தங்களது மகனை இழந்த ஆறாத் துயரத்திலும், பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் கார்த்திக் குமாரின் உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க அவரது பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து அவரது உடலில் இருந்து: இதயம் கண்கள் சிறுநீரகங்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன. இந்த உடல் உறுப்புகள் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு கொடையாக அளித்த கார்த்திக் குமாரின் உடலுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினர். இளைஞரின் இந்தத் தியாகமும், பெற்றோரின் மனிதாபிமான செயலும் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *