தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் படங்கள் இரா.வில்வநாதன் திறந்து வைத்தார்

1 Min Read

திருவல்லிக்கேணி கழக ஏற்பாட்டில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் அன்னி பெசன்ட் சாலை, இருசப்ப தெரு மற்றும் கஜபதி தெரு சந்திப்பில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் படங்கள் அடங்கிய சுவர் விளம்பர ஓவியத்தை, காரல் மார்க்ஸின் பிறந்த நாளான 05.05.2026 ஆம் நாள் மாலை 5.30 மணி அளவில் தென் சென்னை மாவட்ட கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலைமையில், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் திறந்து வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், சூளைமேடு நல். இராமச்சந்திரன், எம்.டி.சி. இராஜேந்திரன், ஆட்டோ சேகர், தர்மா, உதயா, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு மற்றும் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *