டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அடுத்த வாரம் ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் சந்திப்பு; தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்க ஒன்று சேருகின்றனர்.
* நாடு முழுவதும் வர்த்தக எரிவாயு உருளை (சிலிண்டர்) விலை நேற்று ரூ.993 அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒரே நாளில் ரூ.1000 அளவிற்கு விலை உயர்த்தப்பட்டு ரூ.3 ஆயிரத்தை தாண்டியதால் உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி.
* தேர்தல் முடிந்து இரண்டு நாட்களில் எரிவாயு விலை உயர்வு. எதிர்க்கட்சிகள் கண்டனம்.
* மகாராட்டிராவில் வாழும் அனைவரும் மராத்தி பேச வேண்டும், முதலமைச்சர் பட்னாவிஸ் கண்டிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*வணிக எரிவாயு உருளை விலை உயர்வு என்பது ‘தேர்தல் கட்டணம்’ என்று பிரதமர் மோடி அரசை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்
தி இந்து:
* தி.மு.க. தொண்டர்களின் கடின உழைப்பு மே 4-ஆம் தேதி பலனளிக்கும்: சென்னையில் உள்ள மே தினப் பூங்காவில் நேற்று (1.5.2026) அன்று நடைபெற்ற பன்னாட்டு தொழிலாளர் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை
தி டெலிகிராப்:
* விமானக் கட்டண உயர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசை சாடிய உச்சநீதிமன்றம்; அதிகப்படியான பயணப் பருவங்களில் விமானக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான பதிலைத் தெரிவிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.
– குடந்தை கருணா
