புதுடில்லி, ஏப்.25- இந்தியாவில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் சந்தேகங் களைத் தீர்த்துக் கொள்ளவும், விளக்கங்களைப் பெறவும் ‘1855’ என்ற புதிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
அனைத்து மொழிகளிலும் சேவை: இந்த உதவி எண் சேவையானது ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள மக்களும் தங்களது தாய்மொழியிலேயே தகவல்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை
மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இதில் பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பை உறுதி செய்யவும், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும் இந்த நேரடித் தொடர்பு எண் உதவும்.
எளிமையான அணுகுமுறை
கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் கேள்விகள், தகவல்களைப் பகிரும் முறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு (‘1855’) இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
குறிப்பு: மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை உடனுக்குடன் பெறவும், கணக்கெடுப்புப் பணியாளர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு முன்னெடுத்துள்ளது.

