கொள்கை பயணத்தோழர்களுக்கு நன்றி – பாராட்டுகள் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு நன்றி

Viduthalai
3 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொண்ட சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 2023 பிப்ரவரி 3 அன்று தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் தொடங்கி 2023 மார்ச் 31 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிறந்த கடலூரில் நடைபெற்ற நிறைவு விழா வரை   4 கட்டங்களாக    30 நாட்கள் நடைபெற்ற பரப்புரை தொடர் பயணத்தில்  பங்கேற்று தொண்டாற்றிய கொள்கை பயணத் தோழர்களுக்கு  நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கி றோம்.

தமிழர்தலைவர் ஆசிரியரின் உதவியாளர்கள், கழக சொற்பொழிவாளர்கள் நிழற்பட கலைஞர்கள், பெரியார் வலைக்காட்சி தோழர்கள், புத்தக விற்பனைக் குழு தோழர்கள், ஒருங்கிணைப்பாளர்கள். அமைப்பு செயலாளர்கள், மாநில தொழிலாளரணி செயலாளர், செய்தியாளர்கள், ஓட்டுநர்கள் உட்பட தொண்டாற்றிய அனைவருக்கும்  நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், நன்றிகள்!

ஆங்காங்கே ஏற்படும் சில இடர்பாடுகளை  சரி செய்து பரப்புரைபயணம் தடைபடாமல் நடைபெற  செயலாற்றிய கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோருக்கும் நன்றிகள்!

நான்கு கட்டமாக நடைபெற்ற பரப்புரைப் பயணத்தில்  57 பொதுக்கூட்டங்களையும்  ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக ஏற்பாடுகளை செய்து பரப்புரை பயணத்தை வெற்றியடைய செய்த திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, திராவிட மாணவர்கழகம், பகுத்தறிவு ஆசிரிய ரணி, வழக்குரைஞரணி, தொழிலாள ரணி உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக் கும் நன்றி தெரிவித்து பாராட்டி மகிழ்கிறோம்.

அனைத்து மாவட்டங்களிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வரவேற்று, நிகழ்வில் பங்கேற்று உரையாற்றி  உற்சாகப்படுத்தி ஊக்கமளித்து ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள், பெரியார் பற்றாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தலைதாழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

உடனுக்குடன் செய்தியை வெளியிட்டு சிறப்பித்த விடுதலை குழுமத்திற்கும், அச்சு, மின்னணு ஊடகங் களுக்கும் நன்றிகள்!

தினமும் ஆசிரியர் தங்கியிருக்கும் ஊருக்கே விடுதலை நாளிதழை அனுப்பி வைத்து கடமையாற்றிய, சென்னை,திருச்சி விடுதலை பொறுப்பாளர்களுக்கும் நன்றி!

சிறப்பான பாதுகாப்பு அளித்து கடமையாற்றிய தமிழ்நாடு காவல் துறைக்கும் நமது நன்றிகள்.

நிறைவு விழா மாநாடு

பரப்புரை தொடர் பயண நிறைவு விழா மாநாட்டை 31-03-2023 அன்று கடலூரில் மக்கள் வெள்ளத்தில் மிகச் சிறப்பாக நடத்திட, உழைத்திட்ட கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உள்ளிட்ட திராவிடர் கழக கடலூர் மாவட்ட அனைத்து பொறுப் பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.

தமிழர் தலைவர் 

ஆசிரியருக்கு நன்றி!

2 மாநிலங்கள், 4 கட்டங்களாக, 30 நாட்கள், 36 மாவட் டங்கள், 41 சட்டமன்ற தொகுதிகள் 57,பொதுக்கூட்டங்கள், 2811 நிமிடங்கள் (46.74 மணி நேர உரை), 6476 கிலோமீட்டர் பயணம் – ஒரு நாளைக்கு சராசரி 170 கிலோமீட்டர் பயணம் என 90 வயதிலும் பயணம் செய்து களைப்போ, சோர்வோ இல்லாமல்  உற்சாகமாக பயணித்ததோடு எங்களையும் உற்சாகம் குறையாமல் வழிநடத்திய   தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தலைதாழ்ந்த வணக்கத் தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தந்தை பெரியாரை பார்க்காத நாங்கள்  பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட நீங்கள் (தமிழர் தலைவர் ஆசிரியர்) வாழும் காலத்தில் வாழ்கிறோம், தங்கள் தலைமையின்கீழ் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள் ளோம், அதைவிட தங்களோடு பயணிக்கும் வாய்ப்பை வாழ்க் கையில் பெரும்பேறாக கருதுகிறோம்

ஆசிரியர் அய்யா அடிக்கடி சொல்லுவார்கள், “நான் பெரியாரை தலைவராக பெற்றதற்கு என் முதுகை நானே தட்டிக்கொள்வேன்” என்பார்.

இப்போது நாங்கள் சொல்லுகிறோம், “தங்கள் தலை மையின்கீழ் பணியாற்றும் வாய்ப்பு பெற்றதற்கு எங்கள் முதுகை நாங்களே தட்டிக்கொள்கிறோம் அய்யா!”

அனைவருக்கும் மீண்டும் நன்றி!

மீண்டும் சந்திப்போம்!!

அன்புடன்,

பயண ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில்  

இரா.ஜெயக்குமார்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *