மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு அழைப்பிதழ்

1 Min Read

 மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு அழைப்பிதழ் அமைச்சரிடம் வழங்கப்பட்டது

அரசியல்

ஏப் – 14 தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் ஜெகதாப்பட்டினத்தில்  நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு அழைப்பிதழை  தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் அவர்களிடம்  03-04-2023 அன்று காலை கழகப் பொதுச்செயலார் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, கழக தகவல் தொழில்நுட்ப அணிபொறுப்பாளர் வி.சி.வில்வம் பொதுக்குழு உறுப்பினர் த.சவுந்தரராசன்,  மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ச.குமார், மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆ.யோவன்குமார் ஆகியோர் வழங்கினர்.  மாநாட்டை சிறப்பாக நடத்திடுவோம் என அமைச்சர் மகிழ்வுடன் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *