மக்களின் பேராதரவுடன் பா.ஜ.வின் பழிவாங்கும் போக்கு முறியடிக்கப்படும் : கே.எஸ்.அழகிரி

1 Min Read

அரசியல்

சென்னை, நவ.5  மதச்சார்பற்ற கூட்டணியின் ஒற்றுமை மற்றும் மக்களின் பேராதரவுடன் பா.ஜ.வின் பழிவாங்கும்போக்கு முறியடிக்கப்படும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (4.11.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் நிச்சயம் பா.ஜ. வெற்றி பெற முடியாது என்கிற நிலையில், இலக்கை அடைவதற்கு அமலாக்கத் துறை, வருமான வரித்துறை,  ஒன்றிய புலனாய்வு துறை ஆகியவற்றை பயன்படுத்தி எதிர்கட்சி ஆளுகிற மாநிலங்களிலும், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் எதிர்கட்சி தலைவர்கள் மீதும், மாநில அமைச்சர்களின் வீடுகளிலும் ஒன்றிய அரசு சோதனை நடத்தி வருகிறது.

இதன் மூலமாக எதிர்க்கட்சிகளை முடக்கி விடலாம் என்று பா.ஜ. அரசு கனவு காண்கிறது. இந்தியாவிலேயே பா.ஜ. ஆட்சியின் அவலங்களையும், ஆர்எஸ்எஸ், பா.ஜ. சித்தாந்தங்களையும் கடுமையாக எதிர்த்து, அரசியல் பேராண்மையுடன் குரல் கொடுத்து வரும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். இவரது ஆட்சியை முடக்குவதற்கு தமிழ்நாடு கவர்னரை பயன்படுத்துகிறார்கள்.

 மக்கள் நலன்சார்ந்து தமிழக அரசு செயல்படுவதாலும், மதச்சார்பற்ற கூட்டணியின் ஒற்றுமையினாலும் மக்கள் பேராதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிற நிலையில் பாஜவின் பழிவாங்கும் போக்கு நிச்சயமாக முறியடிக்கப்படும் என்று கூறி யுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *