‘துக்ளக்’மீதும் உரிமை மீறல் பாயுமா?

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு, மற்றவை

கேள்வி: தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, தி.மு.க. அமைச்சர்கள் சிலர் ஆழ்ந்த நித்திரையில் இருந்திருக்கிறார்களே?

பதில்: கீழே பாருங்கள், அந்தப் படத்தில் வட்டத்துக்குள் இருப்பவர்கள் தூங்கவில்லையாம். குனிந்து கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். தூங்கியதாகத் திரித்துச் செய்தி போட்டு சபையை அவமானப்படுத்தி விட்டதாம் தினமலர். அதற்கு எதிராக ஸ்டாலின் அரசு உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.

‘துக்ளக்’, 12.4.2023, பக்கம் 11, 13

‘தினமலர்’ என்ன எழுதி உரிமை மீறலுக்கு ஆளாகியுள்ளதோ, அதையேதான் ‘துக்ளக்’கும் வழிமொழிந்திருக்கிறது. துக்ளக்மீது நடவடிக்கை உண்டா?

காரணம் என்னவென்று…?

கேள்வி: காலையில் எழுந்ததும் யாருடைய முகத்தில் விழிப்பீர்கள்?

பதில்: காஞ்சிப் பெரியவாள் முகத்தில். என் படுக்கை அறையில் நான்கு பக்கமும் அவர் படங்கள்தான் இருக்கும்.

‘துக்ளக்’, 12.4.2023, பக்கம் 10

இருக்காதா பின்ன?

பூணூல் பாசம் மிகவும் கெட்டியானதாயிற்றே! அதுவும் ‘தீண்டாமை க்ஷேமகரமானது’ என்று சொன்ன மகா மனித குல விரோதியாயிற்றே!

இப்பொழுது புரிகிறதா, பெரியவாள்மீது குரு மூர்த்தி கூட்டத்துக்கு  இருக்கும் மகாபக்தியின் மகா காரணம் என்ன என்று?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *