செங்கல்பட்டு, ஏப். 5- 1.4.23 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் சத்தியாக்கிரக நூற்றாண்டு தொடக்க விழா முன்னிட்டு வைக்கம் வீரர் தந்தை பெரியார் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சங்கர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
திராவிடர் கழக மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் வைக்கம் போராட்ட வரலாறு குறித்தும் போராட்டக் குழுவிற்கு நாராயண குரு அவர்களின் மடம் மூலம் போராட்ட வீரர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் அளித்து ஆதரவு அளித்தார்.
டி.கே மாதவன், கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் தலை மையில் நடைபெற்ற போராட்டம் போராட்டக்காரர்கள் அனைவ ரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.
போராட்டம் முடங்கிய நிலை யில் தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதி இந்த போராட்டத்தை தாங்கள்தான் தலைமையேற்று நடத்த வேண்டும். இல்லையெனில், நாங்கள் மன்னிப்பு கோருகின்ற சூழ்நிலை உருவாகும் என சிறையில் இருந்து கடிதம் அனுப்பினர். தந்தை பெரியார் தலைமையேற்று போராட்டத்தை வலுப்படுத்தி போராட்டம் கடுஞ்சிறை என 63 நாட்களில் போராட்டம் பரப்புரை செய்தி எழுச்சி பெற செய்து 74 நாட்கள் கடும் சிறை தண்டனை பெற்றார்.
பெரியார் சிறையில் இருக்கும் போது அவரின் மனைவி நாகம் மையார், தங்கை கண்ணம்மாள் ஆகியோர் போராட்டத்தினை தொடர்ந்து நடத்தினர். இறுதியில் வெற்றி பெற்று உரிமையை நிலை நாட்டி “வைக்கம் வீரர்” என வெற்றி விழாவிற்கு தலைமை வகித்தார் தந்தை பெரியார் என கருத்து ரையாற்றினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் அ. ராமலிங்கம் வைக்கம் சத்தியா கிரக போராட்ட நூற்றாண்டு துவக்க விழாவினை வைக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் ஓராண்டு காலம் சிறப்பாக கொண்டாடும் என அறிவித்தார்.
கேரள முதலமைச்சர் அவர் களும் ஓராண்டு முழுக்க கொண் டாடப்படும் என அறிவித்து உள்ளார். இரண்டு மாநில முதல மைச்சர்களும் இணைந்து கொண் டாடுவது சிறப்புக்குரியது பெரியா ரிய மார்க்சிய அம்பேத்கர் தோழர் கள் அனைவரும் ஒற்றுமையாக வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டா டுவோம் என பேசினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக தோழர்கள் மாவட்ட செயலாளர் அ செம்பியன், மாவட்ட அமைப் பாளர் பொன் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அ.பா. கருணாகரன், காஞ்சிபுரம் மாவட்ட இணை செயலாளர் ஆ.மோகன், காஞ்சி மண்டல இளைஞரணி தலைவர் மு.அருண் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.சிவக்குமார், மாவட்ட இளை ஞரணி செயலாளர் வினோத், நகர செயலாளர் கவிஞர்யாழன், மறை மலைநகர் தலைவர் திருக்குறள் வெங்கடேசன், பெரியார் பிஞ்சு சங்கமித்ரா மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் க. புருஷோத் தமன், மாவட்ட பொருளாளர் அ.ராமலிங்கம், க. தனசேகரன், முனிசெல்வம், ரவி மற்றும் தோழர் கள் பலரும் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.