தஞ்சை, ஏப். 6- தஞ்சையில் எழுச் சியுடன் நடைபெற்ற, பட்டுக் கோட்டை அஞ்சாநெஞ்சன் அழ கிரி அவர்களின் 74 -ஆவது நினைவு நாளை முன்னிட்டு பெரியார் பேசுகிறார் தொடர்: 74-ஆவது கூட்டம் 28-03-2023 அன்று தஞ்சை மாதாக் கோட்டை சாலையில் தெருமுனைக் கூட்டம் நடை பெற்றது.
தொடக்கத்தில் மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு இயக்கப் பாடல்களைப் பாடினார்.
மாவட்ட ப.க. இணைச்செய லாளர் ஆ.லட்சுமணன் வரவேற் புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தை மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி தலைமை வகித்து உரையாற்றினார்.
நிகழ்வுக்கு மாவட்ட மாணவர் கழக செயலாளர் ச.சிந்தனையரசு, தஞ்சை தெற்கு ஒன்றிய கழக தலை வர் சூரக்கோட்டை இரா.சேகர், தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செய லாளர் நெல்லுப்பட்டு அ.இராம லிங்கம், தஞ்சை மாநகர 19 – ஆவது வட்ட மாமன்ற தி.மு.க. உறுப்பினர் எம். தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றி னார்கள்.
இக்கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி மாநில ப.க.துணைத் தலை வர் கோபு.பழனிவேல் பேசியதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்ட கழக செயலாளர் அ.அருணகிரி கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து சிறப்புரையாக கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் “தந்தை பெரியாரின் முதல் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி” என்ற தலைப்பைக் கருப்பொருளாக வைத்து உரையாற்றினார்.
அவரது உரையில்…
சுயமரியாதை இயக்கம் தொடங் குவதற்கு முன்பே தந்தை பெரியா ரின் வழியில் சுயமரியாதை சங்கம் தொடங்கி பட்டுக்கோட்டை என் பது பகுத்தறிவாளர்களின் சுயமரி யாதைக் கோட்டையாக செயல்படு வதற்கு அடித்தளம் அமைத்தவர் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர் கள்.
மேலும், பட்டுக்கோட்டை நகர் மன்றத்தில் நிகழ்ந்த ஜாதி அடக்கு முறைகளை அடக்கியவர் அழகிரி, தந்தை பெரியாரின் தத்து வத்தை முன்னெடுத்து தமிழ்நாடு முழுவதும் முழக்கமிட்டவர்…
கடைசிவரை தந்தை பெரியா ரின் கட்டுப்பாடு மிக்க முதல் தளபதியாக செயல்பட்டவர் அஞ்சாநெஞ்சன் அழகிரியாவார்.
மேலும், இளைஞர்களும், மாணவர்களும் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று கூறி நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய தோழர்க ளைப் பாராட்டி நிறைவு செய்தார்.
கூட்டத்தில் விசிறி அடிகளார் முருகேசன் பெரியார் படிப்பகத் தலைவர் நெல்லுப்பட்டு இராம லிங்கத்திடம் பெரியார் படிப்பகத் திற்கு நூல்கள் வழங்கினார்.
இறுதியாக திருவோணம் ஒன்றிய ப.க. அமைப்பாளர் சி.நாக நாதன் ஒத்துழைப்புக் கொடுத்த காவல் துறை அதிகாரிகள் உள் ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை மாநகர கழக அமைப்பாளர் வன்னிப்பட்டு
செ.தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் மாநில கலைத்துறைச் செயலாளர் தெற்குநத்தம்
ச.சித்தார்த்தன், மாநகர கழக தலைவர் ப.நரேந்திரன், மாவட்ட ப.க. அமைப்பாளர் குழந்தை. கவுத மன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் ஜெ.பெரியார் கண்ணன், இரா.வீரகுமார், மாநகர கழக மக ளிரணி செயலாளர் அ.சாந்தி, மாவட்ட ப.க. ஆசிரியரணி தலை வர் ந.சங்கர், மாவட்ட கழக தொழி லாளரணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட தொழிலாளரணி செய லாளர் செ. ஏகாம்பரம், மாநகர ப.க. அமைப்பாளர் சாமி. கலைச் செல்வன், மாவட்ட வழக்குரை ஞரணி தலைவர் இரா.சரவண குமார், ஒன்றிய ப.க. அமைப்பாளர் களிமேடு ர.அன்பழகன், மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் கு.குட்டிமணி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் நிலவன், இராச கிரி தங்க.பாண்டியன், மாணவர் கழக ப.யாழிசை, பெரியார் படிப் பக வாசகர்கள் கு.முருகானந்தம், அண்ணாதுரை, கிராம நிர்வாக அதிகாரி வெ.துரை, சந்தோஷ், அந்தோணிமுத்து, வின்சென்ட், குழந்தைசாமி, மாநில கழக இளை ஞரணி து.செயலாளர் இரா.வெற்றிக்குமார், மண்டல கழக இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் உள்ளிட்ட தோழர்களும் பங்கேற்று சிறப்பித் தனர்.