சென்னை, ஏப். 4- விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸுக்கு 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், அது குறித்து அவர் அறிக்கை வெளி யிட்டுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 2 இடங்களைச் சேர்த்து 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும், ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங் கப்படாததால், அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஒரு முறை கூட வாய்ப்பு பெறாத வர்களும் கருத்தில் கொள்ளப்பட்டதாகவும், ஆளூர் ஷாநவாஸுக்கு நாகை தொகுதியை ஒதுக்காதது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்காதவர்கள் பலர் இருப்பதால் இந்த முடிவு எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாக திருமாவளவன் தெரிவித்து உள்ளார். மேலும் மூவரும் தங்களுடைய வருத் தங்களை வேதனைகளை தன்னிடத்தில் நேரிலே வந்து வெளிப்படுத்தலாம் என்றும் திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக விசிக துணைப் பொதுச் செய லாளர் ஆளூர் ஷாநவாஸ் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், விசிக சார்பில் போட்டியிட எமக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து வலைதளங்களில் பல்வேறு கருத்துகளில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிகிறேன். இதில் என் மேல் அன்பு கொண்டு எனக்கு ஆதரவாக கருத்துப் பரிமாறிய அனைத்துத் தோழர் களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
அதே நேரத்தில், ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும். அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும்.
அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் எழுச்சித் தமிழர் உள்ளிட்ட 8 வேட்பா ளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிக வின் குரல் வலுவாக ஒலிப் பதற்கும், நமது கூட்டணி சார்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமை வதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடு படுவோம்.
எனது பொது வாழ்க் கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

