சமூக நீதிக்கும் ஸநாதனத்திற்கும் இடையிலான தேர்தல் கீழடியில் நின்றபடி வெற்றியை உறுதி செய்த கனிமொழி!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கீழடி, ஏப்.3 கீழடியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பழந்தமிழ் நாகரிகத்தின் அடையாளமான கீழடியிலிருந்து தனது தேர்தல் பரப்புரையை முறைப்படி தொடங்கியுள்ளார்.

“பழந்தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் கீழடியிலிருந்து எனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறேன்” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கைப் போர்: இந்தத் தேர்தலை வெறும் அரசியல் போட்டியாகப் பார்க்காமல், “கீழடிக்கும் நாக்பூருக்கும் (ஆர்.எஸ்.எஸ் தலைமையகம்) இடையேயானப் போர்” என அவர் வர்ணித்துள்ளார்.

இந்த சித்தாந்தப் போராட்டத்தில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *