வேளாண் துறையில் 213 பேருக்கு பணி ஆணை

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, நவ.5 வேளாண்மை துறைக்கு, டி.என்.பி.எஸ்.சி., வழியே, 30 சுருக்கெழுத்து தட்டச்சர், 183 தட்டசர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர் களுக்கு, 31.11.2023 அன்று வேளாண் ஆணையரகத்தில் பணி நியமன ஆணைகளை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். 

கடந்த, 2021 -_2022ஆம் ஆண்டு நிலக்கடலை, பருத்தி, கரும்பு, மக்காச்சோளம், சோளம், கம்பு, துவரை, பச்சைப்பயறு, உளுந்து பயர்களில், மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற, 18 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பூச்சிக் கொல்லி மருந்து உற்பத்தி ஆலைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களுக்கு, எளிய முறையில் இணையதளம் வழியே உரிமம் பெறுவதற்காக, பூச்சிக்கொல்லி உற்பத்தி மற்றும் விற்பனை உரிமம் மேலாண்மை இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை அமைச்சர் துவக்கி வைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *