அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாள் பட்டுக்கோட்டையில் அழகிரி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்!

0 Min Read

பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று (28.3.2026) மாலை 5 மணிக்கு, பட்டுக்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்குத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கிடையே, மாலை அணிவித்து மரியாதை செய்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அழகிரியின் பெயரன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து அன்போடு வரவேற்றார். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், காமராஜ், வீரைய்யன், வி.சி.வில்வம், தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் அசோக் ராணி மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *