வல்லம், மார்ச் 29- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) பெரியார் கலை விழா நேற்று (28.3.2026) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாணவர் அமைப்பின் ஆலோசகர் வரலெட்சுமி வரவேற்புரை வழங்கினார்.
பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேரா முனைவர் ஆர்.மல்லிகா தலைமையுரையாற்றி னார். அவர் உரையாற்றும்போது மாணவர்கள் கல்வி மற்றும் அனைத்து துறைகளிலும் பங்கு பெற்று சிறந்துவிளங்க வேண்டு மென்று கூறினார்.
நிகழ்வின் முக்கிய சிறப்பு அம்சமாக, சமூக ஆர்வலரும், இயக்குநருமான பி.எஸ்.மித்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில் மாணவர்களிடம் சமுக வளர்ச்சிக்கு படைப்பாற்றல் முயற்சிகளுக்கும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாணவர்கள் கேட்கும் வினாக்களுக்கு எளிமையான புரிந்துகொள்வதற்கேற்றார் போல் பதிலினை அளித்தார்.
மேலும் கலை விழா போட்டி யில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசினை அளித்து பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார். சிறந்த பாடகர் அருணா ரவிந்திரன் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்.
இதனை தொடர்ந்து பல்கலைக் கழக பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா உரையாற்றும் போது மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலைவிழாவாக பெரியார் விழா இருக்கின்றது என்று கூறி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை கூறினார்.
இறுதியாக நன்றியுரையை மாண வர் தலைவர் கவுசிக் கூறினார்.
