திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலாம் வகுப்பு மாணவி சுவஸ்திகா சிறீயின் சாதனை!

1 Min Read

திருச்சி, மார்ச் 25- ஆறடிக் கம்பைத் தூக்கி ஆடும் வீரர்களுக்கு மத்தியில், ஆறே வயதில் தேசியப் பதக்கங்களைச் சுழற்றி எடுத்து வந்துள்ளார் திருச்சி மண்ணின் சிறுமி சுவஸ்திகாசிறீ.

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும் இம்மாணவி, தனது அபார சிலம்பத் திறமையால் தேசிய அளவில் தமிழ்நாட்டின் பெருமையை நிலைநாட்டி யுள்ளார்.

கேரளாவின் மூணாறு நகரில் நடைபெற்ற 24-ஆவது தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் (SGADF 2025) சுவஸ்திகா சிறீ ‘தனி கம்பு வீச்சு’ பிரிவில் மின்னல் வேக வித்தைகளைச் செய்து காட்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைபற்றினார். ‘படிவம்-2’ (Form-2) சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1-ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற முதலாவது தேசியப் பாரம்பரிய சிலம்பப் போட்டியில், ‘இரட்டைக் கம்பு வீச்சு’ பிரிவில் கலந்துகொண்ட சுவஸ்திகா சிறீ, இரண்டாம் இடம் பிடித்து மெரிட் சான்றிதழை வென்றார்.

மாணவியின் விடா முயற்சியையும், பயிற்சியையும் பாராட்டிப் பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து களைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *