வணிக எரிவாயு உருளை விநியோகம் 50 சதவீதமாக உயர்வு ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 23-  உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை விநியோகத்தை கூடுதலாக 20 சதவீதம் அதிகரிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் உணவு விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கான எரிவாயு உருளை விநியோகம் தற்போது 50 சதவீதத்தை எட்டியுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக பன்னாட்டு அளவில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வணிக எரிவாயு உருளை விநியோகம் 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது உள்நாட்டு உற்பத்தி சீராகியுள்ளதால் இந்தத் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.

தொழிற்துறை உணவகங்கள் மற்றும் பொது சமையல் கூடங்கள். உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்கள்.

கூடுதல் ஒதுக்கீடு பெற விரும்பும் நிறுவனங்கள் கீழ்க்கண்ட விதிகளைப் பின்பற்றுவது அவசியம்: சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களிடம் முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும். குழாய் மூலம் எரிவாயு இணைப்பு (PNG) பெறுவதற்கு கட்டாயம் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

வீட்டு உபயோக எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல் விநியோகத்தில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை என அரசு உறுதிப்படத் தெரிவித்துள்ளது. கள்ளச்சந்தையைத் தடுக்க நாடு முழுவதும் 3,500 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 1,400 எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கண்காணிப்புப் பணிகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப் பட்டுள்ளன. மாலுமிகள் பாதுகாப்பு: பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள 22 இந்தியக் கப்பல்களில் பணியாற்றும் 611 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *