திராவிட மாணவர் கழகம் – திராவிடர் கழக இளைஞரணி சார்பில் சந்திப்புக் கூட்டம்

1 Min Read

அரசியல்

மருங்கூர், ஏப். 10- நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், மருங்கூரில் 7.4.2023 அன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கி மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மாலை நேர கொள்கை பிரச்சாரமாக எழுச்சி யோடு நடை பெற்றது. 

இக்கூட்டத்திற்கு நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் சு. ராஜ்மோகன் தலைமை வகித் தார். மாவட்ட இளைஞரணி செய லாளர் சுரேஷ், மாவட்ட இளை ஞரணி துணை தலைவர் வி.ஆர். அறிவுமணி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் மு.குட்டிமணி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

திராவிட மாணவர் கழக சட் டக் கல்லூரி மாநில அமைப்பாளர் மு.இளமாறன் கூட்டத்தின் நோக் கத்தை விளக்கி தொடக்க உரை யாற்றினார். மண்டல இளைஞ ரணி செயலாளர் நாத்திக. பொன் முடி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ஜெகதாபட்டினத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடை பெற உள்ள மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது, ஆகஸ்ட் மாதம் நடை பெற உள்ள திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் நாகை மாவட்டம் சார்பில் திராவிட மாணவர் கழக, இளைஞரணி தோழர்கள் திரளாக கலந்து கொள் வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நாகை மாவட்ட திராவிட மாண வர் கழகம் மற்றும் இளைஞரணி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற இக்கூட்டம் இரவு 9.00 மணிய ளவில் நிறைவடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *