மே 7: தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளரணி மாநாடு

Viduthalai
3 Min Read

தொழிலாளரணி கலந்துரையாடலில் முடிவு

அரசியல்

தாம்பரம், ஏப். 12- மேற்கு தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அண்ணல் அம் பேத்கர் சிலை அருகில் அமையப் பெற்ற பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் 9.4.2023 அன்று மாலை 6.30 மணியளவில் திராவிடர் தொழிலாளர் அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. வரும் 7.5.2023 – ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் பெருநகரத்தில் நடைபெறும் திராவிடர் தொழி லாளரணி மாநாடு குறித்து  தொழிலாளரணி மாநில தலைவர் திருச்சி மு.சேகர் மாநாடு நோக்க உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன்,சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, சென்னை மண்டல கழக செயலாளர் 

தே.செ.கோபால், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் மாவட்ட பொருளாளர் கூடுவாஞ்சேரி மா.இராசு,சோமங்கலம் இனமாறன் (எ)பாலமுரளி, தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எஸ். ஆர்.வெங்கடேஷ், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் இரா.சு.உத்ரா, தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் மா.குணசேகரன், வட சென்னை மாவட்ட செயலாளர் திருவொற்றியூர் தி.செ.கணேசன்,வட சென்னை மாவட்ட மகளிரணி தலைவர் க.சுமதி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தென் சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், செம்பாக்கம் கு.வைத்தியலிங்கம் மற்றும் ஆவடி மாவட்டத் துணைச் செயலாளர் பூவை க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் மாநாடு சிறக்க தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் தாம்பரம் தொழி லாளரணி கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களின் கை தட்டலுடன் நிறைவேற்றப்பட்டது.

அரசியல்

தீர்மானம் 1:

திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாட்டை தாம்பரம் மாநகரில் நடத்திட ஒப்புதல் தந்த தமிழர் ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டை யும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 2:

தமிழர் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட தொழிலாளரணிமாநில மாநாட்டை சிறப்புற நடத்திட சென்னை மண்டல,மாவட்ட பொறுப் பாளர்கள் ஒருங்கிணைத்து செயல்பட்டு நடத்திக் காட்டிடுவோம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3:

தாம்பரத்தில் நடக்க இருக்கும் மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து திரளாக தோழர் களை திரட்டி மாநாட்டை வெற்றி பெறச் செய்வோம் என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4:

மாநாட்டின் போது தமிழர் தலைவர் அவர் களால் அறிவிக்கப்பட்ட உண்மை சந்தாக்களையும் வழங்கி தமிழர் தலைவர் அவர்களை மகிழ் விப்போம் என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5:

ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நாசகார திட்டம்”நிலக்கரி”சுரங்கம் அமைப்பதை தடுத்திட்ட தமிழர் தலைவர் அவர்களையும், தமிழ்நாடு முதலமைச்சரையும் இக்கூட்டம் பாராட்டுகிறது.

மாநாட்டு நன்கொடை அறிவித்த தோழர்கள்

தென் சென்னை மாவட்டம்  50 ஆயிரம்,

ஆவடி ஏழுமலை ரூ.50 ஆயிரம்,

ப.முத்தையன்  ரூ.25 ஆயிரம்,

மா.இராசு  ரூ.25 ஆயிரம்

பொறியாளர் ந.கரிகாலன் ரூ.10 ஆயிரம்

தே.செ.கோபால் ரூ.10 ஆயிரம் 

ஆ.வெங்கடேசன்  ரூ.5 ஆயிரம் 

கோ.நாத்திகன் ரூ.5 ஆயிரம்

கு.வைத்தியலிங்கம் ரூ.5 ஆயிரம்

பாலமுரளி  ரூ.3 ஆயிரம் 

தாம்பரம் சு.மோகன்ராஜ் ரூ.3 ஆயிரம்

பி.சி.ஜெயராமன் ரூ.2 ஆயிரம்

வட சென்னை சுமதி ரூ.2 ஆயிரம்

நன்கொடை வழங்கிய 

தோழர்கள்

ஆ.வெங்கடேசன் ரூ.5 ஆயிரம்

பி.சி.ஜெயராமன் ரூ.2 ஆயிரம்.

தாம்பரம் சு.மோகன்ராஜ் ரூ.3 ஆயிரம்

மாநாடு எப்படி நடத்த வேண்டும்; மற்றும் தற்போதைய நிலை குறித்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 10.4.2023 அன்று மாநில தொழிலாளரணி தலைவர் மு.சேகர், சிவகுருநாதன், ப.முத்தையன், மா.இராசு ஆகி யோர் கலந்தா லோசித்து முடிவில் 10 உண்மை சந்தாக்களை வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *