
‘சிந்தனைக் கனி திரு. ஆலடி அருணா ஒரு முழுமையடையாதபயணம்’ என்ற நூலை நேற்று (7.3.2026) மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, வி.அய்.டி. வேந்தர் கல்விகோ முனைவர் கோ. விசுவநாதன் முதல் நூலை பெற்றுக் கொண்டார். தி.மு.க. வெளிநாடு வாழ் இந்தியர் நல அணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் கலாநிதி வீராசாமி சிறப்புரையாற்றினார். நூல் ஆசிரியர் திரு ஆலடி எழில்வாணன் ஏற்புரையாற்றினார். முன்னதாக திரு. ஆலடி அருணா அவர்களின் படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன் எமரால்டு கோ.ஒளிவண்ணன்.
